சென்னை: விபத்தில்லா சூழ்நிலையை உருவாக்க தமிழகத்தில் வாகனங்களின் தரம் தொடர்ந்து சோதிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வாகன விபத்துகளால் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த சூழலில், மாநிலத்தில் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதிக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர் சாலை விதிகளை கடைபிடிக்கிறாரா, ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பதை தொடர்ச்சியான சோதனை மூலம் கண்காணிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்பட்டால், குற்றவாளியின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அந்த வாகனத்தை இயக்கக்கூடாது என்ற விதிகளை வகுக்க வேண்டும்.

கிராமப்புறங்கள் முதல் மாநகராட்சி பகுதி வரை அனைத்து இடங்களிலும் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, வாகனங்களை ஓட்டுவதற்கும், போக்குவரத்துக்கும் தமிழ்நாடு அரசு முறையான சாலை வசதிகளை வழங்க வேண்டும். மேலும், போக்குவரத்து விதிகளில் சமரசம் இல்லாத வகையிலும், லஞ்சத்திற்கு இடமில்லாத வகையிலும் நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மிக முக்கியமாக, தமிழக அரசு அரசு பேருந்துகளை தரமான தரத்துடன் இயக்கி பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய தமிழக அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.