சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான செயல்திறன் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நல்ல பணியைக் கருத்தில் கொண்டும், உற்பத்தித்திறன் மற்றும் தொழில்துறை அமைதியை அதிகரிப்பதில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு செயல்திறன் ஊக்கத்தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல், மாநில போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழுவில் பணிபுரியும் மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான செயல்திறன் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.625 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.195 மற்றும் 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.85 வழங்கப்படும். ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் சாதனை ஊக்கத்தொகைக்கு தகுதியற்றவர்கள். ஆங்கில ஆண்டின் கடைசி நாளில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர் பணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.