சென்னை: திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழ்நாட்டின் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் சில இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11 மற்றும் 12-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில், இன்று, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 9-ம் தேதியும், சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10-ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 9 ஆம் தேதி வரை தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.
எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழைப்பொழிவு பதிவுகளின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 5 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொல்லம் மற்றும் மணல்மேடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் மற்றும் விண்ட்வொர்த் எஸ்டேட் மற்றும் கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.