சென்னை: இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தென்னிந்திய பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11-ம் தேதியும், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 7 மற்றும் 8-ம் தேதிகளில் இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள செருமுள்ளி மற்றும் பிரையர் எஸ்டேட்டில் அதிகபட்சமாக 2 செ.மீ., பில்லிமலை எஸ்டேட் மற்றும் க்ளென்மோரங்கனில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.