தஞ்சாவூர்: பேராவூரணி தொகுதியில் ரூ.52 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சி, வீரராகவபுரம் – சாணாகரை இணைப்புச் சாலை ரூ.23.80 லட்சம் மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் ஊராட்சி, மாருதிப்பட்டினம் முஸ்லிம் தெருவில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, ருத்திரசிந்தாமணி ஊராட்சி பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர்.
மரக்காவலசை ஊராட்சி, துறையூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை என, மொத்தம் ரூ.52.30 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழா நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன், மனோகரன், நாகேந்திரன், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் திமுக ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றியப் பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.