சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கிராமப்புறப் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமிகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தாமல் படிக்க ஊக்கத்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமித்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில், 13,304 சிறுமிகளுக்கான ஆதார் விவரங்கள், 60,349 சிறுமிகளுக்கான வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் 45,498 சிறுமிகளுக்கான ஆண்டு வருமான விவரங்களை எமிஸ் தளத்தில் அவசரமாகப் பதிவு செய்ய வேண்டும்.