சென்னை: தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தயார்நிலைப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANJETCO), வனத்துறை, சென்னை பெருநகர கழிவுநீர் வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளால் மேற்கொள்ளப்படும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டு விவாதம் நடத்தி பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றும் உதயநிதி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.