இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே 12 முதல் 14 வரை நடத்தப்பட்டு பின்னர் மே 22-ம் தேதி நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது, தமிழ் வழி காலியிடங்களுக்கு மட்டும் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணி நியமன உத்தரவு சம்பந்தப்பட்ட துறை மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.