சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திலிருந்து நேற்று அதிகாலை 5.35 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வழக்கம் போல் 247 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் உட்பட மொத்தம் 262 பேருடன் லண்டனுக்கு புறப்பட்டது. விமானம் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து விமானி லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்ததை அடுத்து, விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு 262 பேருடன் லண்டனுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, 247 பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். மத்திய கிழக்கு வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 262 பேருடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் காலை 11.50 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டது.