தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்பகோணம் அருகே கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (55) பால் வியாபாரி. இவர் வழக்கம் போல் நேற்று இரவு நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் செய்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது நாச்சியார்கோவில் வண்டி பேட்டை என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மோதியது அசோக்குமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார் .
இதுகுறித்து தகவல் அறிந்த நாச்சியார் கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக நாச்சியார்கோவில் பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.