சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் கீழ் திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளதாகவும், மூடிய கிணறுகளுக்குப் பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதிப்படுவதாகவும் வரும் செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பைக் கொண்ட மூடிய கிணறுகள், திறந்தவெளி மலம் கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் காரணமாக முற்றிலும் சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் இறந்த துயரத்தை தமிழகம் இன்னும் மறக்கவில்லை.
கோடை வெயிலில் சுத்த குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது ஆபத்தானதல்லவா? எனவே, இந்த விவகாரம் குறித்து உடனடியாக உயர்மட்ட விசாரணையைத் தொடங்கவும், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக முதல்வர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.