தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்னிந்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 22 மற்றும் 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

26-ம் தேதி வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசியில் 4 செ.மீ., குண்டாறு அணையில் 3 செ.மீ., தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 2 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சேர்வலாறு அணையில் 2 செ.மீ. கன்னியாகுமரி மாவட்டம். சமவெளிப் பகுதியில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 99 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.