சென்னை: வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:- வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் முகூர்த்தம் மற்றும் பௌர்ணமி வருவதால், மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் கூட விடுப்பு எடுக்க மண்டல மேலாளர் மட்டத்தில் மீண்டும் அனுமதி பெற வேண்டும், மேலும் பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் பணிக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.