கடலூர்: கடலூர் அருகே கடலில் மிதந்த மர்ம பொருளை கடலோர காவல் படையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கும், வேலங்கிராயன்பேட்டை கடற்கரைக்கும் இடையே உள்ள கடலில் இன்று காலை பெரிய அளவிலான மர்ம பொருள் மிதந்தது. இதனை பார்த்த மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார், பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் கடலோர காவல்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மர்ம பொருளை ஆய்வு செய்தனர். கடலில் எல்லைத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பொருளாகவோ அல்லது கப்பலில் மிதக்கும் போவாவாகவோ இருக்கலாம் என்று சொன்னார்கள்.
மாலத்தீவு என்ற வார்த்தை அந்த பொருளில் எழுதப்பட்டுள்ளது, அது கப்பலில் இருந்து வந்திருக்கலாம். கடலோர காவல்படையினர் அந்த பொருளை கைப்பற்றி பத்திரமாக எடுத்து சென்றனர். கடலில் மிதந்த பொருளை மீனவ கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.