கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் இலங்கேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை, பூபதி பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் பள்ளி வளர்ச்சி சங்க தலைவர் சபிக்குர் ரஹ்மான், துணை தலைவர் தங்கவேல், செயலாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஞானதேவி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தியும் பழைய பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்கள் மற்றும் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் விடுமுறை எடுக்காத மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். விழாவில் சிறப்புரையாற்றிய துணைத் தலைவர் தங்கவேல், “இப்பள்ளியில் படித்து பல அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் வளர்ந்துள்ளனர்.
அவர்களை போல அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும். அதற்கு முன்னாள் மாணவராகிய நாங்கள் ஒத்துழைப்போம்” என உறுதி அளித்தார். நிறைவாக ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.