சென்னை: தமிழக முதல்வர் மு.க., ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், ஒடிசாவில் இருந்து காணொலி காட்சி மூலம் முன்னாள் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேசினார். அதில் அவர் பேசுகையில், “மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் மிக முக்கியமான கூட்டம் இது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம், மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் மிகவும் அதிகரித்து வளர்ச்சியை பாதித்திருக்கும்.

தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்கக்கூடாது. இது மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை உணர்ந்துதான் தற்போது பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பான முயற்சியை எடுத்துள்ளார்.
20. 26 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், ஒடிசா மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மறுவரையறை செய்யக்கூடாது.
அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே தொகுதி சீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஒடிசா மக்களின் நலன்களைக் காக்க பிஜு ஜனதா தளம் போராடும்,” என்றார்.