காஞ்சிபுரம் மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் உட்பட 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, வரும் 29ம் தேதி காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தே.மு.தி.க.,வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் பதவி வகிக்கும் நிலையில், தி.மு.க., காங்., உட்பட 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் அதிமுக, பாமக கவுன்சிலர்கள் மட்டுமின்றி சில திமுக கவுன்சிலர்களும் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். கவுன்சிலர்கள் சிலர் மாநகராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்து வருவதால், மாநகராட்சியில் எந்த திட்ட முடிவுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி திமுக உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக கவுன்சிலர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.