சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு நேற்று மாலை 6 மணிவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், 89,694 பேர் கட்டணத்தைச் செலுத்தியும், 51,773 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பித்துள்ளனர். மே 7ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.