திருப்போரூர் : கடலில் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். இதன் காரணமாக கடலின் ஆழத்தில் வாழும் ஆமைகள் இம்மாதங்களில் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குழி தோண்டி முட்டையிட்டு மீண்டும் கடலுக்கு வந்துவிடும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு கரைக்கு வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் படகுகளில் அடிபட்டும், வலையில் சிக்கியும் இறந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
அதன்படி, கிழக்கு கடற்கரையோர கடற்கரையில் தினமும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றை பார்க்கும் பொதுமக்கள், இதுவும் ஒரு வகை மீன்கள் என நினைத்து, சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இருப்பினும், சுற்றுச்சூழல் அமைப்பு சங்கிலியில் ஆமைகள் ஒரு முக்கிய காரணி என்பதை பலர் உணரவில்லை. இந்த ஆமைகள் இறப்பதைத் தடுக்க தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது, தொடர்ந்து அதிகளவில் ஆமைகள் உயிரிழப்பதே சாட்சி.

நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், மாமல்லபுரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 100 ஆமைகள் கரை ஒதுங்கின. இவற்றைக் கண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல் ஆமை பாதுகாப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் கடற்கரை மணலில் புதைத்தனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து முட்டையிட வரும் பெண் ஆமைகள் உயிரிழந்தது கடல்வாழ் உயிரின ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.