சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்கள் பகுதிநேர பி.இ படிப்புகளைத் தொடர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பின் காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26) பகுதிநேர பி.இ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது.

பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் https://ptbe-tnea.com/regn.php என்ற இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஜூலை 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆன்லைன் கவுன்சிலிங் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கவுன்சிலிங்கில் கல்லூரியைத் தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.