சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பி.எட். தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை பட்டம் மற்றும் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.