சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்காலின் பழைய பாலாறு ஆயக்காட்டு பாசனப் பகுதிக்கு 27.07.2025 முதல் 31.05.2026 வரை தேவைக்கேற்ப, நீர் இழப்பு உட்பட மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை IV மண்டல பாசனப் பகுதிகளுக்கு உட்பட்ட நிலங்களுக்கு 27.07.2025 முதல் 09.12.2025 வரை ஐந்து (5) சுற்றுகளாக, 135 நாட்களுக்கு, தேவைக்கேற்ப தகுந்த இடைவெளியில், 10250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீர் இழப்பு உட்பட) தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் தாலுகாக்களிலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் தாலுகாக்களில் உள்ள நிலங்களிலும், மொத்தம் 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.