சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டிற்கான அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி. சந்திரமோகன் பிறப்பித்த அரசு உத்தரவு: சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, அடுத்த கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டிற்கான அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதனால் ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழமாகப் படித்து, பொருத்தமான கற்பித்தல் மற்றும் கற்றல் உதவிகளை உருவாக்க முடியும். இதைச் செயல்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்கான அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்க அனுமதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.