சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடக்கிறது.தமிழகத்தை 5 முறை முதல்வராகவும், திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதி. 50 ஆண்டுகளாக, ஆகஸ்ட் 7, 2018 அன்று காலமானார்.
இந்நிலையில், கருணாநிதியின் 6வது நினைவு தினம் வரும் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 7 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடையும். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இதில் பங்கேற்க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள், தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு நிலை நிர்வாகிகள், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என 6 மாவட்ட திமுக செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.