சென்னை : வரும் 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் ஏப். 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று (ஏப்.15) முதல் வெள்ளிக்கிழமை(ஏப். 18) வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 38.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையத்தில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகபட்ச வெப்பநிலை 37 – 38 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை, காரைக்காலிலும் (ஏப்.15) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்.15) அதிகபட்ச வெப்பநிலை உயருமென்பதால் மக்களுக்கு வெப்பத்தால் அசௌகரியம் உண்டாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த எச்சரிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.