திருச்செந்தூர் கோவில் அருகே நேற்று கடல் உள்வாங்கல் காரணமாக பாசி படர்ந்த பாறைகள் தெரிந்தன. நேற்று திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் சுமார் 60 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கும் அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அதற்கு முன், பின் நாட்களிலும் கடல் நீர் புகுந்து இயல்பு நிலைக்குத் திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முழு நிலவு இருந்தது. இதையடுத்து அன்றைய தினம் கடல் நீர் உள்வாங்கியது. பின்னர் நேற்று காலை மீண்டும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் சுமார் 60 அடிக்கு கடல் நீர் புகுந்தது. இதனால், பாசி படர்ந்த பாறைகள் தெரிந்தன.
மாலையில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. தமிழ் புத்தாண்டையொட்டி கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வழக்கம்போல் கடலில் நீராடி, அச்சமின்றி சுவாமி தரிசனம் செய்தனர்.