சென்னை: நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் நிலுவையில் உள்ளது. மாநிலங்களுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை, ஏற்கனவே 2 மாத சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை.
மத்திய அரசு 2024-25 பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 86,000 கோடியை ஒதுக்கியிருந்தது மத்திய அரசு. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி, மத்திய அரசு உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1056 கோடி வழங்க கடிதம் எழுதியிருந்தார். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தவிர கூடுதல் நிதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிறைவு விழா நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது.