நெல்லை: ரயில் பாதை சீரமைப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், திருச்செந்தூர்-நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.