சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குறித்து, அவர் தனது X பக்கத்தில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும். அக்டோபர் 15 – 18 வரை மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும். கடலில் இருந்து வரும் மேகங்கள் ஒரு அழகான காட்சி. இன்று திடீர் மழையை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள் கூட 20-30 மிமீ மழை பெய்யும்.
தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் இன்று முதல் அலுவலகத்திற்குச் செல்லும்போது குடை / மழைக்கோட்டை எடுத்துச் செல்ல வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.