தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காணப்படும்.

வரும் 10-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான மூடுபனி காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை பதிவின்படி, அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி, ஈரோட்டில் 102 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி, வேலூரில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.