தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில், தாழ்வான பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ.) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 30 முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், ஏப்ரல் 30 முதல் மே 2 வரை ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 6 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் தென்பட்டியில் தலா 5 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, உத்தம்பாளையத்தில் தலா 4 செ.மீ., தேனி மாவட்டம், மஞ்சளாறு, தூத்துக்குடி மாவட்டம், பேச்சிப்பாறை தலா 4 செ.மீ., மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராமப்பட்டினம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.