தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந.2) துறை மூலம் நபார்டு வங்கி திட்ட நிதி உதவியுடன் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு வகுப்பறை கட்ட கட்டுமானப் பணியினை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுற்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு தயார் ஆனது. இதையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க .ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் அகரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.55.00 லட்சம் மதிப்பில் புதியஆய்வக் கட்டிடமும் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைஅலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ உதவிபொறியாளர் கிருத்திகா, வட்டாட்சியர்திருசிவகுமார், மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மௌலி, அகரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதிய வகுப்பறைகள் மாணவர்களை பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.