சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில், ஆகஸ்ட் 22 அன்று வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நுரையீரல் பிரச்சனை காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மேம்பட்டதால், நல்லகண்ணு 10-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனையின் டீன் சாந்தராமனிடம் கேட்டபோது, ”நல்லகண்ணுவின் வயிற்றில் உணவுக்காக ஒரு குழாய் செருகப்பட்டது.
அடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று கூறினார்.