தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறப்பு ரயில் (06156) அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். மறுதினமும், சிறப்பு ரயில் (06155) அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
சிறப்பு ரயில் (06044) அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.20 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். சிறப்பு ரயில் (06001) அக்டோபர் 20-ம் தேதி மதியம் 12.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் வழியாக மங்களூர் சென்ட்ரலை அடையும்.

சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 21-ம் தேதி மாலை 4.35 மணிக்கு மங்களூர் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். சிறப்பு ரயில் (06043) அக்டோபர் 22-ம் தேதி மதியம் 12.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 10 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
கூடுதலாக, திருவனந்தபுரம் வடக்கு மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.