சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மாவட்டத்திற்கு ஏப்ரல் 25 முதல் மே 15 வரை 21 நாட்கள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் தடகளம், பேட்மிட்டன், கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் பயிற்சிகள் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும்.
நேரு பூங்கா, சென்னை மாவட்ட விளையாட்டு அரங்கம் – தடகளம், பேட்மிட்டன்; சென்னை நகரில் – நீச்சல், குத்துச்சண்டை; முகப்பேர் விளையாட்டு அரங்கில் – பேட்மிட்டன், கூடைப்பந்து; கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் – குத்துச்சண்டை; பெரியமேடி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் – தடகளம், ஜூடோ, ஹேண்ட்பால், பளு தூக்குதல், குத்துச்சண்டை; உட்புற விளையாட்டு அரங்கில் – கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், குத்துச்சண்டை ஆகியவை நடத்தப்படுகின்றன.

இதேபோல், ஏஜிபி விளையாட்டு அரங்கில் – பேட்மிட்டன், ஜிம்னாஸ்டிக், நீச்சல்; எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் – ஹாக்கி; நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் – டென்னிஸ்; புத்தூர் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி – கிரிக்கெட்டில், கோடைகால பயிற்சி முகாமில் தகுந்த பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு இந்த விளையாட்டுகள் நடத்தப்படும். 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பயிற்சி இலவசம். சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7401703480 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே கேட்டுக் கொண்டுள்ளார்.