அணையின் விதிமுறைகளின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் 12.09.2025 முதல் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அன்று முதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது (12.10.2025 அன்று காலை 6 மணி) வினாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பருவமழை பெய்து வருவதாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 7000 கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்படுவதாலும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது.
எனவே, காலை 9.00 மணியளவில் அணையிலிருந்து 9000 கன அடி வரை உபரி நீர் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.