சென்னை: பயணிகளின் தேவையின் அடிப்படையில் தெற்கு ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து இந்த ரயில்கள் நீட்டிக்கப்படுகின்றன.
அந்த வகையில், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. அதன்படி, தாம்பரம் – திருச்சிராப்பள்ளி இடையே செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06191) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையே மேற்கூறிய வாரங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும். இரு திசைகளிலும் தலா 65 சேவைகள் இயக்கப்படும்.
கூடுதலாக, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும். இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.