சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 19-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். காலையில் லேசான மூடுபனி எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக சேலத்தில் 15.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.