சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
மேலும், பொதுவாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசானது முதல் மிதமான மூடுபனி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.