நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடியை வளர்ப்பு நாய் விரட்டுவது போன்ற சிலிர்ப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மீப காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி கரடிகள் குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்புப் பகுதியில் உணவு தேடி கரடி ஒன்று சுற்றித் திரிந்தது.

வளர்ப்பு நாய் ஒன்று கரடியை விரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.