சென்னை: தேசிய அளவில் முருங்கை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த வாரம், கோயம்பேடு சந்தையில் முருங்கை கிலோவுக்கு ரூ.60 மொத்த விலையில் விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதன் விலை கிலோவுக்கு ரூ.30 ஆகக் குறைந்தது.
பீன்ஸ் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.25, வெண்டைக்காய், பாகற்காய் ரூ.20, கேரட் ரூ.18, பீட்ரூட், நூக்கல், உருளைக்கிழங்கு ரூ.15, தக்காளி ரூ.13, பெரிய வெங்காயம் ரூ.12, முள்ளங்கி, கத்திரிக்காய் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் ரூ. 5-க்கும் விற்கப்படுகிறது.

முருங்கைக்காய் விலை சரிவு குறித்து கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் கேட்டபோது, “மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக வெப்பம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. அதன் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்ததால், முருங்கைக்காய் வரத்து அதிகரித்து அதன் விலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, ஜூலை மாதத்தில் முருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.