
சென்னை: தமிழகத்தில் வருவாய் ஈட்டும் முக்கிய துறையாக பதிவுத்துறை உள்ளது. இந்நிலையில், இத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நவ., மாதத்தில், 1,984.02 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அந்த வகையில், 2023 நவம்பர் மாதத்தை விட, 301.87 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டி, சாதனை படைத்துள்ளது.
சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன்பெறும் வகையில், முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை, 100ல் இருந்து, 150 ஆக உயர்த்தப்பட்டது. , டிசம்பர் 5-ம் தேதி கார்த்திகை அமாவாசை அன்று அதிக எண்ணிக்கையில் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்.

இந்த டோக்கன்களைப் பயன்படுத்தி, இதுவரை இல்லாத வகையில் கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் ரூ. 238.15 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், ஒரு நாள் வருவாய் வசூலில் பதிவுத் துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.