சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வேகமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயண வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக மார்ச் 7ஆம் தேதி 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாதத்தில் 39,65,992 பேர் க்யூஆர் குறியீடு டிக்கெட் முறையைப் பயன்படுத்தியுள்ளனர், 9,81,849 பேர் பயண அட்டைகளையும், 9,492 பேர் டோக்கனையும், 280 பேர் குழு டிக்கெட் முறையையும், 42,52,456 பேர் சிங்கார சென்னை பொதுப் போக்குவரத்து அட்டையையும் பயன்படுத்தினர்.

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் QR குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் உள்ளிட்ட பயண டிக்கெட்டுகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு கூறினார்கள்.