கொடைக்கானல்: கொடைக்கானல் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வாகன சோதனையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிக்கியது.
இந்நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் கொண்டு வந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை 5 லிட்டர் கேன்களுக்கு கீழ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் கேன்கள் கொண்டு வரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.