அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடந்தது. அதை பிரதமர் நரேந்திர மோடி ரசித்தார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆடி திருவாதிரை விழா, ராஜேந்திர சோழன் பிறந்த நாள், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் 1000 ஆசிய நாடுகளின் 1000 ஆண்டு விழா என மூன்று பிரமாண்ட விழாக்களை மத்திய கலாச்சாரத்துறை நடத்துகிறது. இன்று நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பூரண கும்ப மரியாதை செலுத்தினார்.

பின்னர், பக்தர்களால் தேவார திருவாசகப் பதிகங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில், ‘நான் கடவுள்’ படத்தின் ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது கைகளால் தாளத்தைத் தட்டி அதை ரசித்தார். பின்னர் இளையராஜா தான் இசையமைத்த திருவாசகம் ஆல்பத்திலிருந்து ‘மாசற்ற ஜோதி’ பாடலைப் பாடினார்.