வருசநாடு: தேனி மாவட்டம் மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மலையில் உள்ள தேவாரம், பண்ணாபுரம், போடி, சின்னமனூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வரசநாடு, தேவாரம், பண்ணாபுரம், மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.
விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு விளையும் காய்கறிகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளின் பிரச்னையால், பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தை தவிர்த்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதை விலங்குகளிடம் இருந்து இறுதிவரை பாதுகாப்பது சவாலாகவே உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான கிராமங்களில், விவசாய நிலங்களில் தொந்தரவு செய்யும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு சாலையில் உலா வருகின்றன. இதேபோல், ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்களையும் காட்டு யானைகள் நாசம் செய்து வருகின்றன.
மூணாறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேவாரம், பண்ணாபுரம், கோம்பை ஆகிய பகுதிகளில் நெல், மா, சப்போட்டா, தென்னை, வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பண்ணைபுரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், தண்ணீருக்காக பயன்படுத்தப்படும் பைப்புகள் மற்றும் மோட்டார்களை முற்றிலும் சேதப்படுத்தி வருகின்றனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றித்திரியும் கரடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பகலில் கூட சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஒத்தயடி பாதையில் செல்லும் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
புலி, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதே முக்கிய பிரச்சனை. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதனால் வீடுகளுக்கு தேவையான அரிசி, உளுத்தம் பருப்பு, கடலை எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டுகளில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.