விழுப்புரம்: தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அதே மையத்தில் தேர்வெழுதிய 167 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவர்களும், அங்குள்ள அல்ஹிலால் தனியார் பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்களும், அனந்தபுரம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களும், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்களும், சத்தியமங்கலம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவர்களும் செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் வேதியியலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஒரே மையத்தில் தேர்வெழுதிய அதிகமான மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றதால், மோசடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை, தேர்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. தேர்வுத் துறை அதிகாரிகள், தேர்வு மையத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.
தேர்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாணவர்கள் மிகவும் திறமையாக விடைத்தாள்களை எழுதியது தெரியவந்தது. இந்த நிலையில், செஞ்சி தேர்வு மையத்தில் எந்த முறைகேடுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, தேர்வு இயக்குநரிடம் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், மாணவர்களின் விடைத்தாள் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று விளக்கினர்.