சென்னை: இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தென் மண்டலத் தலைவர் அமுதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த 3 மாதங்களில், தமிழ்நாட்டில் 25 செ.மீ கோடை மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 97 சதவீதம் அதிகம்.

சென்னையில் மட்டும், கோடை மழை இயல்பை விட 129% அதிகம். சென்னையில், கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கோடை மழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.