ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சட்ட வழிகாட்டுதல் குழுவின் ஆதரவைப் பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் இதில் அடங்கும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க அவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குழு கல்லூரி வளாகங்களில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில், முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ராகிங் தொடர்பான எதிர்வினைகள் குறித்து மாணவர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில், ராக்கிங் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், ராக்கிங் தொடர்பாக மாணவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், அது குறித்த விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.