
எல்லை தாண்டியதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேரும் டிச.10-ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் அனுப்பியுள்ளார்.
கடந்த செப்., மாதம் எல்லை தாண்டியதாக பஹ்ரைன் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அண்ணாமலை, செப்., 20ல்- கடிதம் அனுப்பினார். இந்நிலையில், அந்த கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேரும் டிச., 10-ல் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிந்ததும், அவர்கள் இந்தியா திரும்புவார்கள். மீனவர்களுக்கு இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.